திருவள்ளுவர் சிலையினை திறந்துவைத்த அமைச்சர்!

அரசுபள்ளியில் முப்பெரும் விழா- அமைச்சர் பங்கேற்பு

Update: 2024-01-29 05:01 GMT

திருவள்ளுவர் சிலையினை திறந்துவைத்த அமைச்சர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் முப்பெரும் விழா நடைப்பெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு அப்பள்ளயில் புதிதாக நிறுவபட்டிருந்த திருவள்ளுவர் சிலையினை திறந்து வைத்தார். இதனையடுத்து ஆண்டு விழா மலரை வெளியிட்டும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News