சங்கராபுரத்தில் பைக் மீது லாரி மோதல்: வாலிபர் பரிதாப பலி
சங்கராபுரத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 11:21 GMT
கோப்பு படம்
சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். சங்கராபுரத்தில் டிங்கரிங் கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி கணேஷ் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
நேற்று மதியம் கணேஷ் ஹீரோ ஹோண்டா பைக்கில் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்று, திரும்பினார். சங்கராபுரம் கடைவீதி காவேரி சில்க்ஸ் எதிரே வந்தபோது, சிமென்ட் லோடு லாரி கணேஷ் மீது மோதியது.
இதில், தலையில் படுகாயமடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார், லாரி டிரைவர் துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சுடலைமணி என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.