மஞ்சள் ரூ.15,189 க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு ஒழங்கு முறை விற்பனைக்கூடத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15,189க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-02-21 07:03 GMT

மஞ்சள் 

ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கக் கூடிய மஞ்சளுக்கு உலக அளவில் அதிக வரவேற்பை பெற்று உள்ளது. ஈரோடு மஞ்சளில் குர்குமின் தன்மை அதிகமாக உள்ளதால் ஈரோடு மஞ்சளுக்கு எப்போதும் தனி மவுசு இருந்து கொண்டு தான் இருக்கிறது .ஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசு புவிசார் குறியீடும் வழங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் மஞ்சள் விலை விளைவிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 ஒழுங்குமுறை மஞ்சள் விற்பனை கூடங்கள் மற்றும் தனியார் மஞ்சள் வளாகம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு ஒழங்கு முறை விற்பனைக்கூடத்தில் 2888 மஞ்சள் முட்டைகள் விற்பனைக்கு வந்த நிலையில் 811 மூட்டைகள் விற்பனையாகின. விரலி மஞ்சள் 10569 ரூபாய் முதல் 15189 ரூபாய் வரையிலும் , கிழங்கு 10145 ரூபாய் முதல் 13939 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Tags:    

Similar News