தவாக மாவட்ட செயலாளர் அதிமுகவில் ஐக்கியம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

Update: 2024-03-27 01:44 GMT

அதிமுகவில் ஐக்கியம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான மாரிசெல்வம் தலைமையில் , தெற்கு மாவட்ட தலைவர் ரோபி பிரபாகரன், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் ஆகாஷ் தினகரன் உள்ளிட்ட 10ம் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரமான எஸ்.பி சண்முகநாதன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

கட்சியில் இணைந்தவர்களை முன்னால் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் கழக துண்டு அணிவித்து வரவேற்றார். அந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சரும் கழக வர்த்தக அணி செயலாளருமன சி.த செல்லபாண்டியன், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சிவசாமி வேலுமணி,உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அதிமுக மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் பிரபு செய்திருந்தார்.

Tags:    

Similar News