வாங்கல் அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது
வாங்கல் அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-11 15:11 GMT
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பகுதியில், பணம் வைத்த சூதாடுவதாக, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாபுவுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், பிப்ரவரி 10ஆம் தேதி மதியம் 12 மணியளவில், வாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் ஈவிஆர் தெருவில் உள்ள முள் தோட்ட பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஈவிஆர் தெருவை சேர்ந்த சஞ்சய் மற்றும் பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்து, சூது ஆடுவதற்கு பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.200 பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த வாங்கல் காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.