மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது !

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-03 04:58 GMT

கைது 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள சிவகிரி அருகே தேவிபட்டணம் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் முருகன் (வயது 48). விவசாயி. இவர் கடந்த மே மாதம் 12ம் தேதி இரவு தனது வீட்டின் முன் தன்னுடைய பைக்கை நிறுத்தியிருந்தார். நள்ளிரவு நேரத்தில் இந்த பைக்கை யாரோ திருடிச் சென்று விட்டனர்.

இதே போன்று தேவிபட்டணம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த அரிச்சந்திரன் மகன் சத்தியராஜ் (38) என்பவரது பைக்கையும் யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில் பைக்குகளை திருடிச் சென்றது இராஜபாளை யம் நல்லமங்களம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலை ஒளிவு மகன் இசக்கி (24), தேவிபட்டணம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் மகன் காளிகுமார் (28) என தெரிய வந்தது. இன்று இவ்விருவரையும் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தார்.

Tags:    

Similar News