வலங்கைமான் அருகே அரசு அனுமதியின்றி மணல் திருடிய இருவர் கைது

வலங்கைமான் அருகே அரசு அனுமதியின்றி மணல் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-16 13:42 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கண்டியூர் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட அய்யம்பேட்டை தாண்டாங்கோரை நல்லிச்சேரி வடக்கு தெருவை சேர்ந்த மணி என்பவரின் மகன் தினகரன் மற்றும் பெருக வாழ்ந்தான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட,

மானங்காத்தான் கோட்டகம் கோரையாறு அருகில் மணல் திருட்டில் ஈடுபட்ட மானங்காத்தான் கோட்டகம் மாதா கோவில் தெருவை சேர்ந்த குழந்தைசாமி என்பவரின் மகன் பெர்ணாண்டஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News