செல்போன் பறித்த இரண்டு சிறுவர்கள் கைது

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் செல்போன் பறித்த இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-29 12:12 GMT

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் செல்போன் பறித்த இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

 திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் நடந்து சென்றவரிடம் 2 வாலிபர்கள் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து வடக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். இந்த நிலையில் இந்த சம்பவ தொடர்பாக 17 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News