முயல் வேட்டையாடிய இருவருக்கு அபராதம் !
வனப்பகுதியில் முயல் பிடித்துக் கொண்டிருந்த இருவரும் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ. 5000 வீதம், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-16 10:13 GMT
அபராதம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில் சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் இணைப்பு பகுதியில் 3 மாவட்ட வன அலுவலர்கள் தலைமையில் ஒருங்கிணைந்து வேட்டை தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. வீரகனூர் பேரூராட்சி ராயர்பாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டபோது வனப்பகுதியில் முயல் பிடித்துக் கொண்டிருந்த சின்னத்தம்பி, அஜய் இருவரும் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ. 5000 வீதம், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது