நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதிய விபத்தில் இருவர் காயம்

சிவகாசியில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

Update: 2024-04-25 04:08 GMT
 சிவகாசியில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.
சிவகாசியில் நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகன மோதிய விபத்தில் இருவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனி பகுதியைச் சார்ந்தவர் ஹரிராஜ் வயது 23 இவர் தனது சகோதரர் கோகுல்ராஜ் மற்றும் தனது நண்பர் சிவசுப்பிரமணியன் ஆகியோருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது அந்த இருசக்கர வாகனத்தை சிவசுப்பிரமணியன் ஒட்டி வந்த பொழுது இருசக்கர வாகனம் சிவகாசி கவிதா ஜவுளிக்கடை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது சாலையில் நடந்து சென்ற ஜெகநாதன் என்பவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஜெகநாதன் மற்றும் கோகுல்ராஜ் ஆக இருவரும் காயம் அடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து அறிிராஜ் அளித்த புகார் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் ஓட்டிய சிவ சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News