லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது

வெள்ளகோவில் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-25 17:22 GMT
லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவர் கைது
வெள்ளகோவில் காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் நேற்று முத்தூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதிய பஸ் நிலையம் அருகில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த கச்சேரி வலசை சேர்ந்த சந்திரன் மகன் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்பவரை கைது செய்தனர். இதே போல் தாராபுரம் சாலை சிவனாதபுரம் பஸ் நிறுத்தம் அருகில் லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கார்த்திகேயன் (45) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் வெளி மாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச்சீட்டை ரூ.50க்கு விற்பனை செய்து வந்ததும், குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News