மது விற்ற இருவர் கைது

விராலிமலை பகுதிகளில் அனுமதி இன்றி மது விற்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-23 05:33 GMT

மது விற்பனை

விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் பெட்டிக்கடையில் மதுபானம் பதுக்கி விற்ற செல்வராஜ்(62), கீரனுார் பிரிவு சாலை அருகே பெட்டிக்கடையில் மதுபானம் விற்ற விராலிமலை அருண் கார்டன் பகுதியை சேர்ந்த நல்லு(60)ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News