தாந்தோணி மலையில் இருவர் கைது
தாந்தோணி மலையில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்;
By : King 24X7 News (B)
Update: 2024-05-26 14:46 GMT
கோப்பு படம்
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பத்மசீலனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மே 25ஆம் தேதி மாலை 4:30 மணியளவில், தாந்தோணிமலை பகுதியில் உள்ள ஏ பி எஸ் மருத்துவமனை அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, தாந்தோணி மலை வ.உ .சி நகரை சேர்ந்த குமார், ராயனூர், எம்ஜிஆர் நகர், முதல் தெருவை சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய சூதாட்ட அட்டைகளையும், ரூ.200-யும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.