தாராபுரத்தில் பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணை தாக்கி இரண்டு பேர் கைது

தாராபுரம் பேருந்து நிலையத்தில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வரும் பெண்ணை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-25 17:04 GMT

தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணி வயது 34 இவர் தாராபுரம் பஸ் நிலையம் அருகே பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார் தாராபுரத்தை அடுத்த காந்திஜி நகரை சேர்ந்தவர் சங்கர் 51 இவரது நண்பர் சுரபி மணி 53 இந்த நிலையில் சங்கர் பியூட்டி பார்லர் நடத்தி வரும் மதிவதனிடம் வட்டிக்கு கடனாக பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதர் பின்னர் பணத்தை சங்கரிடம் கேட்டு மதிவாணி போனில் பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இது குறித்து சங்கர் தனது மனைவியிடம் கூறினார். இதனால் கோபம் அடைந்த சங்கரின் மனைவி தனது கணவர் சங்கரை அழைத்துக்கொண்டு பியூட்டி பார்லருக்கு சென்று மதிவாணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டினார்

அங்கு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு அப்போது அங்கு வந்த சுப்பிரமணியம் அவர்களை தடுத்து விட்டதாக கூறப்படுகிறது இதில் காயமடைந்த மதிவாணி தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் மதிவாணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் மற்றும் சுரபி மணியை கைது செய்தனர் பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News