டூவீலர் -4- வீலர் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்
டூவீலர் -4- வீலர் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
Update: 2024-02-17 12:19 GMT
கரூர் மாவட்டம், காந்திகிராமம் தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் வயது 54. இவர் பிப்ரவரி 14-ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணி அளவில், கரூர்- திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் முன்பு சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் ஒன்று கிருஷ்ணன் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்த கிருஷ்ணனுக்கு தலை, வலது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணனின் மனைவி பரமேஸ்வரி வயது 47 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த அடையாளம் தெரியாத வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.