இரண்டு சக்கர வாகன விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி !!!

பவானிசாகர் அருகே இரண்டு சக்கர வாகன விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2024-05-28 11:26 GMT

பலி

பவானிசாகர் அருகே இரண்டு சக்கர வாகன விபத்தில் சிகிச்சை பலனின்றி பலி. சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அருகே தேவேந்திரன் 49 பவானிசாகர் புதிப்பீர் கடவு சேர்ந்த பரத் 17 பவானிசாகர் அணை பூங்கா அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்சி பள்ளி அருகில் மேற்படி இறந்தவர் கிழக்கே இருந்து மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் எதிர்திசையில் பரத் என்பவர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும்ஓட்டி வந்து மேற்படி தேவேந்திரன் மீது மோதியதில் வாதிக்கு நெஞ்சு பகுதியில் பலத்த மொக்கைக் காயமும் வலது கை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது‌. அதேபோல் எதிரிக்கும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இரண்டு பேரையும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பலத்த காயம் ஏற்பட்ட வரை கோவை குமரன் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் போது சிகிச்சை பலனில்லாமல் இரவு 24.20 மணிக்கு இறந்து விட்டார். இரவு ரோந்து உதவி ஆய்வாளர் சாமி அவர்கள் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வருகிறார்.
Tags:    

Similar News