டூவீலர் மோதியதில் ரோட்டோரமாக நின்றிருந்த இளைஞர் உயிரிழப்பு

கரூர்- கோவை ரோட்டில் மொச்ச கொட்டம்பாளையத்தில் ரோட்டோரமாக நின்றிருந்த இளைஞர் மீது டூவீலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.;

Update: 2024-01-05 14:45 GMT

 புதுக்கோட்டை மாவட்டம், நெம்புகை, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் ஞானவேல் வயது 21. இவர் ஜனவரி 4ஆம் தேதி இரவு 8 மணி அளவில், கரூர்- கோவை சாலையில் உள்ள மொச்ச கொட்டம்பாளையம் பகுதியில் செயல்படும் LGB கம்பெனி முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே சாலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, தும்பிவாடி, சங்கராபுரம், மாருதி தெருவை சேர்ந்த தங்கதுரை மகன் மணிவேல் வயது 24 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நின்று கொண்டு இருந்த ஞானவேல் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஞானவேலுக்கு முன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ஞானவேலில் மனைவி மஞ்சுளா, இதுகுறித்து கரூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், உயிரிழந்த ஞானவேலின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக, வேகமாக டூ வீலரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மணிவேல் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News