டூ வீலர் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு

டூ வீலர்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து. வாலிபர் உயிரிழப்பு.காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-03-18 11:21 GMT

தென்னிலை காவல் துறை

திருப்பூர் மாவட்டம், முருகம்பாளையம் சுட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி வயது 43. இவர் மார்ச் 16ஆம் தேதி மாலை 5 மணி அளவில், கோவை - கரூர் சாலையில் அவருக்கு சொந்தமான டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம், கரூர் மாவட்டம், தென்னிலை காவல் எல்லைக்குட்பட்ட, கரைப்பாளையம் பகுதியில் உள்ள செந்தில்நாதன் வீடு அருகே சென்ற போது, எதிர் திசையில் கிருஷ்ணகிரி மாவட்டம், சொட்டகாளி, வேங்கைநகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் வயது 42 என்பவர், வேகமாக ஓட்டி வந்த அரசு பேருந்து, டூவீலரில் சென்ற வீரமணி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலை, காது, வலது கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் பட்டு, வீரமணி சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த வீரமணியின் மனைவி மரகதம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த வீரமணியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வேகமாகவும், கவனக்குறைவாகவும் பேருந்தை ஒட்டி, விபத்து ஏற்படுத்திய செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல் துறையினர்.
Tags:    

Similar News