நாய் குறுக்கே வந்ததால் டூவீலர் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு

வேப்பந்தட்டையை அடுத்துள்ள கோரையாறில் நாய் குறுக்கே வந்ததால் டூவீலர் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2024-06-20 05:05 GMT

வேப்பந்தட்டையை அடுத்துள்ள கோரையாறில் நாய் குறுக்கே வந்ததால் டூவீலர் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கோரையாறு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் விமல்ராஜ் (வயது 24). இவர் நாரணமங்கலத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணி யாற்றி வந்தார். கடந்த 14-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக தனது டூவீலரில் கோரையாரிலிருந்து அரும்பாவூர் நோக்கி சென்றுள்ளார். அ.மேட்டூர் பகுதியில் சென்ற போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் டூ வீலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம டைந்த விமல்ராஜ் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத் துவமனையிலும், பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விமல்ராஜ் நேற்று பரிதாபமா உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News