திருக்கண்ணபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

திருக்கண்ணபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் படுகாயம்.

Update: 2024-02-09 05:22 GMT

திருக்கண்ணபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

திருக்கண்ணபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. நாகை மாவட்டம் கீழ்வேளூர் பொற்காலக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வெங்கடேசன், வயது 28 இவர் பிப்ரவரி 5ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் திருக்கண்ணபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட வாய்க்கால் வெட்டு மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கீழ தஞ்சாவூர் பெரிய கண்ணமங்கலம் பகுதியில் சேர்ந்த செல்லத்துரை மகன் சுதாகர் என்பவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இந்த நிலையில் வெங்கடேசன் திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எதிர் தொடர்பாக வெங்கடேசனின் தாயார் அம்லு பிப்ரவரி 8 வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு கொடுத்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீசார் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Tags:    

Similar News