நகையை திருடி சென்ற இரண்டு பெண்கள் கைது !

சில்லறை எடுப்பது போல் நடித்து பையில் இருந்த 6 சவரண் நகையை திருடி சென்ற இரண்டு பெண்களை துரிதமாக செயல்பட்டு ஒரு மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசார்.

Update: 2024-04-05 05:58 GMT

இரண்டு பெண்கள் கைது

மத்தூர் அருகே ஓடும் பேருந்தில் சில்லறை எடுப்பது போல் நடித்து பையில் இருந்த 6 சவரண் நகையை திருடி சென்ற இரண்டு பெண்களை துரிதமாக செயல்பட்டு ஒரு மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டம் குப்பன அள்ளி கிராமம் இந்திரா நகரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரது மனைவி சத்யா இவரது குழந்தைகளுக்கு பள்ளியின் கோடை விடுமுறையொட்டி சத்யாவின் அம்மா வீடான திருவண்ணாமலைக்கு குழந்தைகளுக்களை கொண்டு வந்து விட்டுவிட்டு மீண்டும் சத்யா அவரது தங்கை லட்சுமி கணவர் ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் நேற்று இரவு திருவண்ணாமலையிலிருந்து பெங்களூர் நோக்கி அரசு பேருந்தில் டிரைவர் இருக்கைக்கு பின்னால் அமர்ந்து சென்று கொண்டுள்ளனர்.

அப்பொழுது மத்தூர் அருகே பேருந்து வரும்போது இரண்டு பெண்கள் சத்யாவின் இருக்கைக்குபின் அவர்களை உரசியவாறு பின்னால் நின்று கொண்டு கையில் இருந்த காசை கீழே போட்டு இரண்டு மூன்று முறைக்கு மேலே எடுப்பதாக பவனை செய்து வந்தனர்.

இந்நிலையில் பேருந்து மத்தூர் பேருந்து நிலையம் வந்த பொழுது இந்த இரண்டு பெண்களும் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து கீழே இறங்கி சென்றுள்ளனர். இந்த இரண்டு பெண்கள் நடத்தையில் சந்தேகித்த சத்யா அவரது பையை எடுத்து பார்த்துள்ளார்.

அப்பொழுது பையில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 சவரன் தங்க நகை இருந்த பர்ஸ் காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த சத்தியா பேருந்திலேயே கத்தி கதறி கூச்சலிட்டு அழுதுள்ளார். பின்னர் ஓட்டுநர் அந்த பேருந்தை நேரடியாக மத்தூர் காவல் நிலையம் எடுத்துச் சென்று ஒப்படைத்தார்.

பின்னர் அங்கிருந்த மத்தூர் போலீசார் அந்த பெண் கூறிய அடையாளத்தின் பெயரில் மத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர் அப்பொழுது அந்த இரண்டு பெண்களும் பேருந்தில் இருந்து இறங்கி உடனடியாக ஊத்தங்கரை செல்லும் பேருந்தில் ஏறி சென்றனர்.

பின்னர் பேருந்து ஊத்தங்கரை செல்வதற்கு முன்னே சாமல்பட்டி அருகே பேருந்தை பாதி வழியில் நிறுத்தி பேருந்தில் இருந்து யாரும் இறங்காதவாறு பயணிகள் அனைவரையும் நிற்க வைத்து அந்த இரண்டு பெண்களை பிடித்து பரிசோதனை செய்தனர் அப்பொழுது அந்த பெண் ஒருவரின் உள்ளாடையில் தங்க நகை இருந்தது தெரிய வந்தது பின்னர் அந்த நகையை மீட்டு அவர்கள் இருவரையும் கைது செய்த மத்தூர் போலீஸார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் லட்சுமி புரத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற சிவா என்பவரது மனைவி பிரியா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவரது மனைவி கருத்தம்மா என்கின்ற கார்த்திகா என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது என்பது வெளிவந்துள்ளது. பின்னர் இருவரின் மீது வழக்கு பதிவு செய்த மத்தூர் போலீசார் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். ஓடும் பேருந்தில் பயனியின் பையில் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட நகையை ஒரு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு மீட்ட மத்தூர் போலீசாருக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags:    

Similar News