விக்கிரவாண்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-12-15 07:37 GMT
விக்கிரவாண்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது. இதையொட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் மற்றும் பெரியாயி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டார். அதன்பிறகு இரவு நடந்த நிகழ்ச்சியில் பம்பை மேளம் முழங்க பூசாரிகள் தாலாட்டு பாட ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை விக்கிரவாண்டி பருவத ராஜகுலத்தார் மற்றும் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News