வைகுண்ட ஏகாதசி... ஸ்ரீரங்கத்துக்கு கூடுதல் ரயில்கள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரங்கநாதரை தரிசிக்கும் வகையில், ஸ்ரீரங்கத்தில் கூடுதலாக ரயில்கள் நிற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-21 11:35 GMT

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரங்கநாதரை தரிசிக்கும் வகையில், ஸ்ரீரங்கத்தில் கூடுதலாக ரயில்கள் நிற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் கூடுதல் ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் 23 அன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 05.20 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633), கன்னியாகுமரியில் இருந்து மாலை 05.50 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634) ஆகியவை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் (முறையே இரவு 09.54 மணி மற்றும் அதிகாலை 12.53 மணி) நின்று செல்லும். இதே போல டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை வழி கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101), கொல்லத்தில் இருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16102) ஆகியவை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் (முறையே இரவு 09.20 மணி மற்றும் இரவு 09.38 மணி) நின்று செல்லும்.

Tags:    

Similar News