55 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதசி விழா

மேலமாப்படுகை, லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

Update: 2023-12-23 02:20 GMT

மேலமாப்படுகை, லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மேலமாப்படுகையில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் உள்ளது. ராகு தோஷ நிவர்த்தி மற்றும் மாங்கல்ய பாக்கியம் அளிக்கும் இவ்வாலயத்தில், 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வைகுண்ட ஏகாதேசி திருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகாதீபாரதனை நடைபெற்றது. பெருமாள் கோதண்ட ராம அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி ,சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாளுக்கு தமிழ் பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார் தொடர்ந்து பெருமாள் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News