வாணியம்பாடி: தப்பியோடிய குற்றவாளி - போலீசார் தேடுதல் வேட்டை

வாணியம்பாடி அருகே நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த நின்று கொண்டிருந்தபோது உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை தள்ளிவிட்டு தப்பி ஓடிய குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2024-03-18 08:22 GMT

தப்பியோடிய கதிர்வேல் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் பெண்ணுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்து தற்போது வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள நீதிபதி வீட்டின் முன்பு ஆஜர் படுத்த நின்று கொண்டிருந்தபோது திடீரென கதிர்வேல் உதவி ஆய்வாளர் மனோஜ் மற்றும் காவலர் திருவருடச்செல்வம் ஆகியோரை தள்ளி விட்டு தப்பி ஓடினார். அவரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
Tags:    

Similar News