உலக அளவில் தோல் ஏற்றுமதியில் வாணியம்பாடி 2ம் இடம் - எ.வ. வேலு

உலக அளவில் தோல் ஏற்றுமதியில் வாணியம்பாடி இரண்டாம் இடம் வகிக்கிறது என அமைச்சர் எ.வ வேலு தெரிவித்தார்.

Update: 2024-01-04 04:11 GMT

தொழில் முதலீடுகள் மாநாடு

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முதலீடுகள் மாநாடு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழில் முதலீட்டாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

   அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறி சிறப்புரை ஆற்றினார். அமைச்சர் பேசுகையில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டமாக 2019 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது திருப்பத்தூர் வேளாண் வளர்ச்சியில் அங்கம் வகித்து வருகின்றது தோல் தொழிற்சாலையில் தோல் ஏற்றுமதியில் உலக அளவில் இரண்டாம் இடமாக வாணியம்பாடி திகழ்ந்து வருகிறது என்று பேசினார் இதில் திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை, திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் பாஸ்கரன், கிளை மேலாளர் கெளரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்...

Tags:    

Similar News