வாணியம்பாடி: அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு - விசாரணை

வாணியம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள 2 கடைகளின் பூட்டை உடைத்த மர்ம நபர் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2023-11-05 01:23 GMT

திருட்டு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சத்தியா என்பவர் வாகன  டீலர் ஷோரூம் நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அருகே கோபி என்பவர் மீன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இரண்டு கடைகளின் பூட்டிய ஷட்டரை நூதனமாக உடைத்து பண பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடி சென்றுள்ளார். வழக்கம் போல் இன்று காலை கடைகளின் உரிமையாளர்கள் கடை திறக்க வந்து போது கடைகள் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிசி டிவி கேமராவை பார்த்த போது கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி கேமிராவில் சிக்காமல் இருப்பதற்கு ஒரு சிசி டிவி கேமிராவை வேறு பக்கமாக திருப்பி விட்டு கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடைக்குள் உள்ள சிசி டிவியை ஆப் செய்து அதன் பிறகு பண பெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடை உரிமையாளர்கள் சத்தியா மற்றும் கோபி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News