சிவன் கோயிலில் வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், பூத்தாலக்குட்டையில் உள்ள சிவன் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-24 01:26 GMT

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமர் பூத்தாழீஸ்வரர், அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமர் சோழீஸ்வரர் ஆகிய கோயில்களில் பிரதோஷ சிபு பூஜைகள் செவ்வாய்கிழமை நடைபெற்றது. பூத்தாலகுட்டை பகுதியில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமர் பூத்தாழீஸ்வரர் சுவாமிகளுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் சந்தனம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிபு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News