நெல்லையப்பர் கோவிலில் வசந்தா விழா

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் வசந்தா விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது.

Update: 2024-04-25 03:52 GMT

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் வசந்தா விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. 

திருநெல்வேலி மாவட்டம் டவுன் நெல்லையப்பர் கோவிலில் வருடம்தோறும் கோடைகாலத்தில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டி வசந்தா விழா நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வசந்தா விழா நேற்று (ஏப்.24) கோவிலில் நடைபெற்றது. இதில் அம்பாளுக்கு இளநீர்,சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த பூஜை தொடர்ந்து 21 நாட்கள் நடைபெற உள்ளது.

 

Tags:    

Similar News