வாசவி ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-05-17 12:41 GMT

வாசவி ஜெயந்தி

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று காலை வாசவி ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த விழாவில் குழந்தை வரம் வேண்டி மஞ்சளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை பெண்கள் வழிபட்டனர்.

Tags:    

Similar News