மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் விசிகவினர் அஞ்சலி

திருச்சியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் விசிக சார்பில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

Update: 2024-01-25 06:46 GMT
1965 ஆம் ஆண்டில் இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழகத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி, தென்னூர், அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது. இவர்களது நினைவிடங்களில் திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், மாவட்ட செயலாளர் முசிறி கலைச்செல்வன், சக்தி ஆற்றல் அரசு, புல்லட் லாரன்ஸ், கலைச்செல்வன், திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, இளம் சிறுத்தைகள் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அரசு, பொறியாளர் அணியின் மாநில துணைச் செயலாளர் பெல் சந்திரசேகரன், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் காட்டூர் புரோஸ்கான், மாவட்ட பொருளாளர் சந்தனமொழி மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News