நாகையில் விசிக ஆர்பாட்டம்

நாகை அவுரித்திடலில் விசிக சார்பில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்த வேண்டும் என ஆர்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-25 02:12 GMT

ஆர்பாட்டம்

நாடாளுமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் நடத்த வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாகை அவுரித்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் அருட்செல்வன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் செல்வராசு, சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன், மாவட்ட பொருளாளர் கதிர்நிலவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நகர செயலாளர் முத்துலிங்கம் வரவேற்றார்.

கட்சியின் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வ அரசு கலந்து கொண்டு பேசினார். மின்னணு வாக் குப்பதிவு எந்திரத்துடன், ஒப்புகை சீட்டு எந்திரத்தை இணைத்து அதன் எண்ணிக்கையின் அடிப்படையில் வேட்பாளர் வெற்றி, தோல்வியை அறிவிக்க வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்ட துணை செயலாளர் பேரறிவா ளன், தி.க. மாவட்ட செயலாளர் பூபேஷ் குப்தா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News