பண்ருட்டி நகராட்சியில் வாகனம் தொடங்கி வைப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட வாகனங்களை நகர்மன்ற தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2024-01-28 06:23 GMT

வாகனங்கள் துவக்கி வைப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்டத்தின் கீழ் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய டாட்டா ஏசி வாகனங்களை பண்ருட்டி நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் கொடியசைத்து பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். உடன் பண்ருட்டி நகராட்சி ஆணையாளர் எம் எஸ் ப்ரீத்தி, நகர மன்ற துணைத் தலைவர் சிவா, சுகாதார அலுவலர் முருகேசன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நகரக் திமுக நிர்வாகிகள் நகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News