தேவர் ஜெயந்தி விழாவிற்கு விதிமுறைகளை மீறிச் சென்ற வாகனங்கள்

அருப்புக்கோட்டை வழியாக தேவர் ஜெயந்தி முன்னிட்டு வாகனங்களில் தொங்கியபடி கூச்சலிட்டபடியே சென்ற இளைஞர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார்

Update: 2023-10-30 13:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா இன்று நடைபெறுகிறது தேவர் ஜெயந்தி முன்னிட்டு விருதுநகர் சாத்தூர் ராஜபாளையம் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் தென்காசி உள்ளிட்ட சுற்றுவட்டார சேர்ந்த பொதுமக்கள் அருப்புக்கோட்டை வழியாக பசும்பொன் செல்வது வழக்கம் பசும்பொன் செல்லும் வாகனங்கள் முறையான அனுமதி பெற்ற பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

பசும்பொன் செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்காக ராமலிங்காமில் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது பசும்பொன் சொல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சோதனை சாவடியில் முழுமையாக சோதித்து வீடியோ பதிவு செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் காந்திநகர் பகுதியில் ஒரு சில வாகனங்களில் இளைஞர்கள் தொங்கியபடியும் வாகனத்தின் மேல் அமர்ந்தும் கூச்சிலிட்டவரே சென்றனர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே அமர்ந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் பெயருக்காக கேட்பது போல் கேட்டு அங்கிருந்து கிளம்பியதும் மீண்டும் வாகனங்களில் தொங்கியபடி கூச்சலிட்டபடியே சென்றனர் அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

Tags:    

Similar News