கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்ற சென்ற நபர் தவறி விழுந்து இறந்தார்.

Update: 2024-07-04 04:07 GMT

பைல் படம்

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் விழுந்த மாட்டை காப்பாற்ற சென்றவர் தவறி விழுந்து இறந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தலைச் சேர்ந்தவர் ராஜாமணி, 55; இவர், நேற்று முன்தினம் மதியம் 12:30 மணியளவில் அதே பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு மாடு அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்தது. மாட்டை காப்பாற்ற முயன்றபோது, ராஜாமணியும் தவறி கிணற்றில் விழுந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News