நீலகிரி எல்லை சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

நீலகிரி எல்லை சோதனை சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பாக தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டது.

Update: 2023-12-29 12:38 GMT

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வருகை புரியும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசோதனைக்குப் பின்பே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேபோல் பேருந்தில் பயணிப்பவர்களையும் வெப்பமானியை கொண்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டு காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என மருத்துவ குழுவினர் சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News