விஜயகாந்த் மறைவு - மெளன அஞ்சலி ஊர்வலம்

சிவகாசியில் தேமுதிக கட்சி சார்பில் விஜயகாந்த் மறைவையொட்டி மௌன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.

Update: 2023-12-29 02:16 GMT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதனையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ,மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக கட்சி தொண்டர்களும், பல்வேறு அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் பல்வேறு இடங்களில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தேமுதிக கட்சி சார்பில் நடைபெற்ற மௌன அஞ்சலி ஊர்வலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் கட்சி நிரவாகிகள் பலர் கலந்துகொண்டு விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News