குட்கா விற்ற இருவர் கைது

கொல்லங்கோடு அருகே கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-18 08:01 GMT

காவல் நிலையம் 

கொல்லங்கோடு எஸ்.ஐ. ஹரிகுமாரன் நாயர் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது, ஊரம்பு பகுதியில் உள்ள பிபின் என்பவரின் கடையில் போலீசார் சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட 25 பாக்கெட் குட்கா புகை யிலை இருந்துள்ளது. அதை பறிமுதல் செய்து, பிபின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதுபோல் பாத்திமா நகர் பகுதியில் சூரியகோடு பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் நடத்தி வரும் கடையில் போலீசார் சோதனை செய்ததில், அரசால் தடை செய் யப்பட்ட 14 பாக்கெட் குட்கா புகையிலை இருந் துள்ளது. அதை பறிமுதல் செய்த போலீசார் ரவீந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News