கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உடையார்பாளையம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Update: 2023-12-30 06:51 GMT
தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உடையார்பாளையம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் கணபதி தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளர்களுக்கும் சதவீத அடிப்படையில் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடபட்டது. இதில் அச்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.