சாலையை சீரமைக்க கிராமமக்கள் வலியுறுத்தல்!

திருமயம் ஒன்றியம் ராங்கியம் ஊராட்சியில் 2 கிமீ துாரமுள்ள தார்ச்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-03-19 08:39 GMT

சாலை

திருமயம் ஒன்றியம் ராங்கியம் ஊராட்சியில் வங்கியில் இருந்து மிதிலைப்பட்டி வரையிலான 2 கிமீ துாரமுள்ள தார்ச்சாலையில் பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். வாகனங்களும் பழுதாகி வருகின்றன. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News