விழுப்புரம் இ.எஸ். கலை அறிவியல் கல்லூரிஆண்டு விழா.

விழுப்புரம் இ.எஸ். கலை அறிவியல் கல்லூரிஆண்டு விழாவில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2024-04-30 13:45 GMT

மாணவிக்கு விருது வழங்கல் 

விழுப்புரம் இ.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் 8-ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி யின் முதல்வர் முரளிதரன் தலைமை தாங்கி, 2023-2024-ம் கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். கல்லூ ரியின் துணை முதல்வர் வேல்முருகன் வரவேற்றார்.

புதுச்சேரி பல்கலைக்கழக சுப்பிரமணியபாரதி தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பள்ளி துறைத்தலைவர் பேராசிரியர் கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து, துறை வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற,

100 சதவீதம் விடுப்பு எடுக்காமல் கல்லூரிக்கு வருகைப்புரிந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப் பட்டது. மேலும் பல்கலைக்கழகதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய பேராசிரியர்களை பாராட்டி அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. முடிவில் கணினி அறிவியல் துறைத்தலைவர் சிவசங்கரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News