விழுப்புரத்தில் மண் பானைகள் விற்பனை மும்முரம்

விழுப்புரத்தில் மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-30 10:50 GMT

மண் பானைகள் விற்பனை தீவிரம்

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், கரும்புச்சாறு, மோர் போன்றவற்றைபொது மக்கள் பருகி ஓரளவு வெப் பத்தை தணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நீர்ச் சத்து நிறைந்த தர்பூசணி பழம்,

வெள்ளரிப்பழம் ஆகியவற்றையும் சாப்பிட்டு வருகின்ற இதனால் எங்கு பார்த்தாலும் குளிர்பான கடைகளில் பொதுமக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அதுபோல் சாலையோரம் உள்ள இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் மற்றும் கரும்புச்சாறு ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் குளிர்சாதன பெட்டியாக திகழும் மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே உள்ள சாலைஅகரம், ராகவன்பேட்டை ஆகிய இடங்களில் மண்பாண்ட தொழி லாளர்களால் தயார் செய்யப் பட்டு சாலையோரத்தில் மண் பானைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன இங்கு சாதாரண மண் பானைகள், குழாய் பொருத்தப்பட்ட மண் பானைகள் மற்றும் சிறிய அளவிலான குடுவைகளும் விற்பனைக்காக உள்ளன.

இதில் சாதாரண மண் பானைகள் ரூ.100- ல் இருந்து ரூ.300 வரையும், குழாய் பொருத்தப்பட்ட மண் பானைகள் ரூ.200-ல் இருந்து ரூ.300 வரையும், குடு வைகள் ரூ.80-ல் இருந்து ரூ.1.50 வரையும் விற்பனை செய்யப் படுகிறது. இவற்றைபொதுமக் கள் பலரும் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

Tags:    

Similar News