பொன்னமராவதி அருகே விநாயகர் சிலை திருடப்பட்டதாக புகார்

பொன்னமராவதி அருகே விநாயகர் சிலை திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-12 15:33 GMT

காவல் நிலையம்

பொன்னமராவதி அருகேயுள்ள கோவனூர் பொன்னழகி அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயில் அருகே 2 அடி உயர விநாயகர் சிலை இருந்துள்ளது. இச்சிலையை மர்ம நபர்கள் இரவு திருடிச் சென்றனர்.

இதுகுறித்து கோவனூர் ஊராட்சித் தலைவர் ராமசாமி அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News