விதிமீறல் - 115 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

சேலத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 115 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2024-04-24 04:07 GMT

பைல் படம் 

சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி வாகன சோதனை நடத்தி, விதிமுறைகளை மீறி வருபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த 3 மாதத்தில் மாவட்டத்தில் வாகன சோதனை நடத்தி பலரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து உள்ளனர்.

இது குறித்து வட்டாரபோக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘மாவட்டத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது செல்போன் பேசியபடி மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி வந்த 115 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்து உள்ளோம். அதே போன்று விபத்து மூலம் உயிர் இழப்பு ஏற்படுத்திய 76 பேரின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது' என்று கூறினர்.

Tags:    

Similar News