தேர்தல் விதிமுறை மீறல் - கட்சி கொடியுடன் வாக்களிக்க வந்த வானதி சீனிவாசன்

கோவையில் வாக்களிக்க வந்த பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கட்சி கொடி கட்டப்பட்ட காரில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-19 05:52 GMT

கட்சி கொடி கட்டப்பட்ட கார் 

கோவை பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் சிவானந்தகாலணி ஆறு முக்கு பகுதியில் உள்ள காமராஜர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள் எனவும் மக்கள் அனைவரும் பிரதமர் மோடி மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளதாகவும் நேர்மையான திறமையான ஆட்சியை மோடி தந்துள்ளாதாக தெரிவித்தார்.

மக்களின் ஆதரவு பாஜகவிற்கு உற்சாகத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக கூறியவர் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் மாற்றி காட்டும் என்றார்.கிராமம் மற்றும் நகரங்களில் ஒரே மாதிரியான ஆதரவு பாஜகவிற்கு கிடைக்கும் எனவும் அண்ணாமலைக்கு கிடைக்கும் ஆதரவு கோவையில் தாமரை மலரும் என்ற நம்பிக்கையை‌ ஏற்படுத்தியுள்ளது எனவும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.கோவை பாஜகவிற்கு ஆதரவான தொகுதி என்றவர் இந்த பகுதி முழுக்க பாஜக கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாகவும் இந்த தேர்தலில் பாஜக வாக்கு வங்கி பல மடங்கு அதிகரிக்கும் என்றார்.

கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்றவர் 400 எம்.பி.க்களில் அண்ணாமலையும் ஒருவராக இருப்பார் என்றார்.தேர்தல் செலவிற்காக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை பிடித்து கொண்டு பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பொய் செய்தி பரப்புவதாகவும் பல்வேறு இடங்களில் தேர்தல் ஆணையம் உத்தரவுபடி அதிகாரிகள் நடக்கவில்லை எனவும் திமுக,அதிமுக கட்சியினர் வெளிப்படையாக பணம் கொடுப்பதாகவும் இதுகுறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.திமுக பணம் பட்டுவாடா வெளியே வராமல் இருக்க ஆட்களை செட்டப் செய்து பாஜக பணம் கொடுத்தது போல திசை திருப்பி விடுகிறார்கள் என்ற அவர் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கொடுத்தாலும் கோவையில் தாமரை தான் மலரும் என தெரிவித்தார்.

முன்னதாக வாக்களிக்க வந்த வானதி சீனிவாசன் பாஜக கட்சி கொடியுடன் வாக்குச்சாவடி மையம் வரை தனது வாகனத்தில் வந்திருந்து வாக்களித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News