கிர்கிஸ்தானில் வன்முறை தாக்குதல் - விஜய் வசந்த் எம் பி அறிக்கை 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் பாதுகாப்பாக இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக விஜய் வசந்த் எம்பி தெரிவித்துள்ளார்.;

Update: 2024-05-20 04:44 GMT
விஜய் வசந்த் எம்பி
விஜய் வசந்த்  எம்பி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   கிர்கிஸ்தான் நாட்டில் ஏராளமான இந்திய மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலின் எதிரொலியாக இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் பரவின. கர்கிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய மாணவர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து விசாரித்த போது, இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் அவர்கள் நலன் உறுதி செய்யப்படும் என தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.  அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணித்து மாணவர்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News