மணல் கடத்திய லாரி பறிமுதல்
அன்னவாசல் அருகே மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-03-17 10:33 GMT
பறிமுதல் செய்யப்பட்ட லாரி
அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யாதேவி உள்ளிட்ட போலீசார் குடுமியான்மலை பின்னங்குடி வெள்ளாற்று பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது இதனையடுத்து மணல் கடந்தி வந்த மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளர் சீகம்பட்டியை சேர்ந்த கோபி (எ) செல்வக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.