திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு
திருப்பூரில் பாராளுமன்ற தேர்தல் பொது பார்வையாளர் ஹங குப்தா,செலவின பார்வையாளர் அசோக்குமார் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-29 10:27 GMT
அதிகாரிகள் ஆய்வு
திருப்பூரில் பாராளுமன்ற பொது தேர்தல் -2024 நடைபெறுவதை முன்னிட்டு 18- திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பொதுப்பார்வையாளர் ஹிமான்சு குப்தா, தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் மாநகராட்சி எல் ஆர் ஜி மகளிர் அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
உடன் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபிநபு, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், உதவி ஆட்சியர் பயிற்சி கிருத்திகா விஜயன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.