பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்தனர்.

Update: 2024-04-18 07:49 GMT

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் பகுதியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது.. இந்த சரணாலயத்திற்கு இலங்கை ஆஸ்திரேலியா பாகிஸ்தான் பர்மா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து நத்த, குத்தினாரை வர்ணனாரை,அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 24 வகையான பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் தமிழக முழுவதும் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் இந்த பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளருக்கு அனுமதி இல்லை என வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News