ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த தன்னார்வ அமைப்பினர்

அதியமான்கோட்டை அருகே ஆதரவற்று இறந்தவரின் உடல் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Update: 2024-02-14 11:18 GMT

நல்லடக்கம் செய்த அமைப்பினர் 

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நல்லம்பள்ளி சேசம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி இறந்த அவரைப் பற்றி விசாரித்ததில் இவருக்கு யாரும் இல்லை. அதியமான் கோட்டை காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாது, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சந்திரசேகரன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 81 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர்.
Tags:    

Similar News